Wednesday 8th of May 2024 09:43:30 PM GMT

LANGUAGE - TAMIL
14 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை  இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட இருவர் கைது!

14 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட இருவர் கைது!


யாழ்ப்பாணத்திலிருந்து மாதகல் கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்குத் தங்க கட்டிகளைக் கடத்த முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்தவர்களிடமிருந்து சுமார் 137 மில்லியன் (13 கோடியே 70 லட்சம் ரூபா) பெறுமதியான 14 கிலோ 350 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாதகல் கடற்பரப்பில் பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்திய போதே, 14 கிலோ 300 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாதகலைச் சேர்ந்த இரு நபர்களே இவ்வாறு கைது செய்யப்டுள்ளனர்.

தைது செய்யப்பட்ட இருவரையும் கடற்படையினர் காங்கேசன்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதுடன், மீட்கப்பட்ட தங்கக் கட்டிகளையும் கையளித்துள்ளனர்.

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE